சர்ச்சைக்குரிய பிக்பேர்ன் (பெருவெடிப்புச் சோதனை) ஆய்வு சுவிஸட்சர்லாந்தில் ஆரம்பம்!




உலகின் மிகவும் சர்ச்சைக்குரிய ஆய்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் பிக்பேர்ன் ஆய்வுப் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
வரலாறு காணாத வகையில் குறித்த ஆய்வு தொடர்பில் மாறுபட்ட விமர்சனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.


உயிரினங்கள் உருவாக்கப்பட்ட விதம் குறித்து ஆராய்வதற்காக நீண்ட சுரங்கமொன்றில் செயற்கையான பிரலயமொன்றை ஏற்படுத்தி அதன் மூலம் ஆய்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இந்த ஆய்வுகள் இடம்பெறுகின்றமையினால் சுவிஸ் மக்கள் மற்றும் ஊடகங்கள் பெரும் பரபரப்பாக காணப்படுகின்றன.

சுமார் 27 கிலோ மீற்றர் நீளமுடைய சுரங்கமொன்றில் அணுசக்தியைப் பயன்படுத்தி பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தி அதன் மூலம் ஏற்படும் மாற்றங்கள் கண்காணிக்கப்படவுள்ளன.

எனினும் இந்த ஆய்வுப் பணிகள் மனித குலத்தின் நிலைப்பாட்டுக்கே பங்கம் ஏற்படுத்தக் கூடும் என ஒரு சில ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எது எவ்வாறாயினும் பாரிய பொருட்செலவில் ஜெனீவா நகரில அமைக்கப்பட்டுள்ள சுரங்கத்தில் குறித்த ஆய்வுகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.



பெருவெடிப்புச் சோதனை BBC

ஸ்விட்சர்லாந்து பிரான்ஸ் எல்லைப்புறத்தின் அடியில், அணு உடைக்கும் கருவி ஒன்றைச்சுற்றி இரு திசைகளிலும், அணுக் கருத்துகள்களைக் கொண்ட கதிர்க்கற்றைகளை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஏவியிருக்கிறார்கள்.

பிரபஞ்சம் உருவான விதம் குறித்து மேலும் நன்றாகப் புரிந்துகொள்ளும் முயற்சி தொடங்குவதைக் குறிக்கும் ஒன்றாக இந்த பரிசோதனை அமைகிறது.

இந்த கற்றைகள் சில நேரம் சுழற்றிவிடப்பட்டு பின்னர் மோத வைக்கப்படும்போது, சூரியனை விட பல மடங்கு அதிக வெப்பம் உருவாகும்.

இதன் மூலம், அணுக் கருத்துகள்கள் உருவாகும் என்றும், அதன் மூலம் பிரபஞ்சம் எப்படி ஒன்றாக பிணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த புதிய அறிவைப் பெறமுடியும் என்றும் இயற்பியலாளர்கள் (பௌதீகவியலாளர்கள்) நம்புகிறார்கள்.

இந்த அணுத்துகள்களின் மோதல்கள் சூரியன் உட்பட அனைத்தையும், அனைத்து சக்திகளையும் அகத்துறிஞ்சிக்கொள்ளும் வல்லமை கொண்ட ஒரு கரும் சூனிய வலயத்தை உருவாக்கக்கூடும் என்றும் அதனால் உலகம் அழியக்கூடும் என்றும் சில வட்டாரங்களிலிருந்து கடுமையான எச்சரிக்கைகள் வந்துள்ளன.