சிலம்பாட்டத்தில் "சின்ன ரம்பா...."சிம்பு வைத்த செல்லப் பெயராம்

அழியாத வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடித்துவிட்டது ரம்பாவின் தொடை! இன்றளவும் இந்த வரலாறை மீற ஒரு நடிகைக்கும் சாமர்த்தியம் இல்லை.

ஆனால், சனாகானிடம் எதைக் கண்டாரோ? ‘சின்ன ரம்பா’ என்றே அழைக்கிறாராம் சிம்பு. அழைத்தால் போதுமா? அதை பதிவு செய்ய வேண்டாமா? சிலம்பாட்டம் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கும் சனாகானை மேலே சொன்ன ‘பட்ட பெயரோடு’ அழைத்து ஒரு பாடலே பாடியிருக்கிறாராம். ‘பம்பாய் இப்போ மும்பையானது. சின்ன ரம்பா இப்போ தெம்பாதான் திரியுது’ என்று தொடங்குகிறதாம் அந்த பாடல். தன்னை ரம்பா என்று அழைப்பதில் ரொம்பவே சந்தோஷப்படுகிறார் சனாகானும். ஒவ்வொரு படத்திலும் தனது அசோக் பில்லர் தொடைகளை காட்ட தயங்கியதே இல்லை ரம்பா. சனாகான் அப்படி ஏதாவது இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறாரா என்பதை சிலம்பாட்டம் வந்த பிறகுதான் முடிவு செய்யவேண்டும்.

சின்ன ரம்பாவுக்கு யூனிட் கொடுக்கும் முன்னுரிமை மற்றொரு நாயகியான சினேகாவுக்கு சின்ன கோபத்தை வரவழைத்திருக்கிறதாம். ஆனாலும், தனது முறை வரட்டும். நடிப்பாலேயே அடிக்கிறேன் என்று சபதம் செய்திருக்கிறாராம். இரண்டு பெண்கள் ஓரிடத்தில் இருந்தால், கலகலப்பும் உண்டு. கைகலப்பும் உண்டு!

தோல்வியில் துவண்ட ஹீரோ!

வெயில் படத்திற்குப் பிறகு பரத்துக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. படம் ஓரளவுக்கு வெற்றிதான் என்றாலும் பரத்தைவிட பசுபதிதான் அதிகம் பேசப்பட்டார். அதற்குப்பின் திருமுருகன் இயக்கிய எம் மகன் ஓரளவுக்கு ஓடியது. அதற்கடுத்து எந்தப் படமும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. கூடல் நகர், சென்னை காதல், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, தற்போது வெளியான சேவல் வரை வரிசையாக தோல்விப் படங்கள். அதனால் மனம் நொந்தவருக்கு தற்போது ஆறுதல் தரும் படமாகவும், நம்பிக்கை படமான ஆறுமுகத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்குவதால் மிகவும் தெம்புடன் இருக்கிறார். இருந்தாலும் காதல் படத்தை போல மிகப்பெரிய வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார். அதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு ஒரு சில கதைகளை ஓ.கே. பண்ணி வைத்திருக்கிறார். ஆறுமுகம் படம் வெளியானவுடன் அந்தப் படத்தில் நடிக்கவுள்ளார். எப்படிப்பட்ட நடிகராக, இயக்குனராக இருந்தாலும் தற்போதைய ஹிட்தான் பேசப்படும் என்பதை தெளிவோடு புரிந்து வைத்துள்ளார் பரத்.

சிறுவர்களில் மூளைப் புற்றுநோயை தோற்றுவிக்கும் மரபணு அலகு கண்டுபிடிப்பு.

lankasri.comபிரித்தானிய கேம்பிரிஷ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சிறுவர்கள் மத்தியில் மூளையில் ஏற்படும் புற்றுநோய்க்கு அநேகம் காரணமாக விளங்கும் மரபணு அலகை (gene) கண்டறிந்துள்ளனர்.

இந்த மரபணு அலகானது மரபணு அலகுகளின் இணைவால் உருவாகும் ஒரு fusion gene என்று கண்டறியப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் இந்த மரபணு அலகின் தொழிற்பாட்டை நிரோதிப்பதன் மூலம் சிறுவர்கள் மத்தியில் மூளைப் புற்றுநோய் தோன்றுவதிலின்றும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பாதுகாப்பளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இக்கண்டுபிடிப்பு இத்துறையில் சிறந்த முன்னுதாரணக் கண்டுபிடிப்பாகி இருப்பதோடு எதிர்கால ஆய்வுகள் பலவற்றுக்குமான உறுதியான ஆரம்ப அடித்தளத்தை இட்டிப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

"ஒரு கோடியே 5லட்சம் சதுர மைல்" வான மண்டலத்தில் விழுந்த பெரிய "ஓட்டை";பூமிக்கு ஆபத்தா?

lankasri.comஅமெரிக்காவில் உள்ள "நாசா" விண்வெளி ஆய்வு மையம் வான மண்டலத்தில் ஏற்பட்டுள்ள "ஓட்டை" குறித்து ஆய்வு செய்து வருகிறது."நாசா”வை சேர்ந்த விஞ்ஞானி பால் நியூமன் தலைமையிலான குழுவினரின் ஆராய்ச்சியில்,கடந்த ஆண்டு 97லட்சம் சதுர மைல் அளவுக்கு வானவெளியில் ஓட்டை ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. இது பரப்பளவில் வடக்கு அமெரிக்காவுக்கு இணையானது ஆகும்.

இந்த வான மண்டல ஓட்டை மென் மேலும் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும் விஞ்ஞானிகளின் ஆய்வு கூறுகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த ஓட்டை ஒரு கோடியே 5லட்சம் சதுர மைல் அளவுக்கு பெரிதாகி உள்ளதாக ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வான மண்டல ஓட்டையின் பரப்பளவு அதிகரித்துக்கொண்டே செல்வதால் "அல்ட்ரா" கதிர்கள் பூமியை தாக்கும் அபாயம் இருக்கிறதா? என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

உண்மைத்தமிழனா அஜித்? உப்பிட்டவனை மறக்காதே...

"சினிமாவை சினிமாவோடு விட்டுவிடுங்கள்: அஜுத்" என்பதன் உள்கருத்து என்ன?

கடந்த சில நாட்களுக்கு முன் அஜுத் இந்த போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளனும் என்று செய்தி வெளியிட்டதை அடுத்து புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கொந்தழிப்பின் பின் அஜுத் தான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்று ஊடங்கங்களுக்கு விசேட கருத்தை தெரிவித்திருந்தார்.

வேண்டா வெறுப்பாகத்தான்(சுயநலத்துக்காக) இவர் இந்தப்போராட்டத்தில் கலந்து கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. போராட்டம் என்பது உணர்வு சம்மந்தப்பட்டது. இவருக்குத்தான் தமிழன் என்ற உணர்வு கொஞ்சம்கூட இல்லை. கமெரா முன் நடிக்கத்தெரிந்த அவருக்கு நிஜவாழ்க்கையில் நடிக்கக்கூடத்தெரியவில்லை. மனமில்லாமல் வந்தவர் இந்த உண்ணாவிரதப் போரட்டத்தில் ஆற்றிய உரையில் ஈழத்தமிழர் பற்றிய எந்த ஒரு விடயத்தை கூட அவர் அங்கு குறிப்பிடவில்லை. மாறாக,"சினிமாவை சினிமாவோடு விட்டுவிடுங்கள்" என்று விசமதனமாக சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

அஜுத்தின் அந்த கருத்துக்கு தமிழ் சினிமா நடிகர் சங்க தலைவர் சரத்குமார் "நீங்கள் ஊட்டிவிட்டு வளந்தவர்கள் தான் நாங்கள், உங்களுக்காக போராட நாங்கள் காத்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அஜுத் இந்த போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளனும் என்று செய்தி வெளியிட்டதை அடுத்து புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கொந்தழிப்பின் பின் அஜுத் தான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்று ஊடங்கங்களுக்கு விசேட கருத்தை தெரிவித்திருந்தார்.

நன்றிகெட்ட ................!

இணையத்தள உபயோகம் மூளையின் செயல்திறனை ஊக்குவிக்கிறது அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்

lankasri.comஇணையத்தளங்களை உபயோகிப்பதானது நடுத்தர வயதுடையவர்களுக்கும் வயதானவர்களுக்கும் மூளையின் திறன் பலமடைய உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தீர்மானமெடுத்தல், குழப்பநிலைகளுக்கான காரணத்தை பகுத்தாராய்தல் என்பனவற்றை கட்டுப்படுத்தும் மூளையின் மையங்கள், இணையத்தள தேடுதலின்போது ஒழுங்கமைக்கப்படுவதாக மேற்படி ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், வயதாதலுடன் தொடர்புடைய மனோவியல் மாற்றங்களை தடுக்கவும் இணையத்தள தேடுதல் உதவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேற்படி ஆய்வின் முடிவுகள் அமெரிக்க மனோவியல் மருத்துவ வெளியீட்டில் இடம்பெற்றுள்ளன.

மூளை வயதாவதன் காரணமாக அதன் கலங்களின் செயற்பாடுகளிலான குறைபாடு உள்ளடங்கலான பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறுக்கெழுத்து புதிர்கள் போன்றவற்றின் மூலம் மூளையின் செயற்பாட்டு திறனை ஊக்குவிக்க முடியும் என முன்னர் கண்டறியப்பட்ட நிலையில், அதற்கு இணையத்தள பயன்பாடும் கணிசமான அளவில் உதவுவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஆய்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் காரி ஸ்மோல் விபரிக்கையில், ""இணையத்தள தேடலானது மூளையின் சிக்கல்மிகு செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக உள்ளது. இது மூளையின் தொழிற்பாட்டை விருத்தி செய்கிறது'' என்று கூறினார்.

விலங்கு இழையங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது முழுமையான செயற்கை இருதயம்!

http://www.medgadget.com/archives/img/131113.jpg

மனிதனின் சொந்த இருதயத்தையொத்த செயற்பாடுகளைக் கொண்ட செயற்கை இருதயமொன்றை பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.

இருதய இயக்கம் பாதிக்கப்பட்ட,இருதய மாற்று சிகிச்சையொன்று சாத்தியமற்ற நோயாளிகளுக்கு இந்த செயற்கை இருதயமானது வரப்பிரசாதமாக அமையும் என மேற்படி ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பிரான்ஸின் பிரபல இருதய சத்திர சிகிச்சை நிபுணரான மருத்துவ கலாநிதி அலெய்ன் கார்பென்ரியர் தெரிவித்தார்.

கடந்த 15வருடகால ஆராய்ச்சியின் பயனாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை இருதயம் தொடர்பாக விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடு பாரிஸில் இடம்பெற்றது."உயிரியல் இரசாயன இழையங்களைப் பயன்படுத்தி முழுமையான செயற்கை இருதயம் உருவாக்கப்படுவது உலகில் இதுவே முதற்றடவையாகும்"என மேற்படி இருதயத்தை உருவாக்கியுள்ள உயிரியல் மருத்துவக் கம்பனியான "கார்மட்"இன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பற்றிக் கொலம்பியர் தெரிவித்தார்.

"இந்த உயிரியல் இரசாயன இழையங்களானது விலங்குகளின் இழையங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டமையால் அவற்றை மனித உடல் நிராகரிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவுள்ளது"என அவர் கூறினார்.கார்மட் நிறுவனமானது,பொது மற்றும் இராணுவ பாவனைக்கான விமானங்கள்,எறிகணைகள்,விண்கலங்கள் என்பனவற்றை உருவாக்கி சந்தைப்படுத்தி வரும் விண்வெளி மற்றும் விமானப் பாதுகாப்பு கம்பனியால் ஸ்தாபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேலும் 15புதிய செயற்கை இருதயங்களை உருவாக்க கம்பனி திட்டமிட்டுள்ளது.இந்த இருதயங்களை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் மனிதர்களுக்கு பொருத்தும் பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.1980களிலிருந்து செயற்கை இருதயங்களை உருவாக்குவதற்கான அநேகஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன.அவற்றில் அநேகமானவை இருதய மாற்று அறுவைச் சிகிச்சை வரை நோயாளியின் உயிரை தக்க வைப்பதற்கு உபயோகிக்கப்பட்டன.

எனினும்,அவை எதுவுமே நீண்டகால அடிப்படையில் மாற்று இருதயமாக இயங்கும் வல்லமையைக் கொண்டிருக்கவில்லை.அந்த செயற்கை இருதயங்களைப் பொருத்துவதால் ஏற்படும் ஒவ்வாமை எதிர் விளைவுகள் மற்றும் குருதி உறைதல் போன்ற பிரச்சினைகள் காரணமாகவே அவற்றினை நோயாளிக்கு நிரந்தரமாக உபயோகிப்பது சாத்தியமற்று இருந்தது.ஆனால்,இப்புதிய மிருக இழையங்களால் உருவாக்கப்பட்ட செயற்கை இருதயமானது குருதி உறையும் அபாயம் குறைந்தது என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.


இறை நம்பிக்கை மூலம் வலிகளிலிருந்து விடுதலை அதிநவீன விஞ்ஞான தொழில்நுட்பம் மூலம் நிரூபிப்பு...!!!

lankasri.comஇறை நம்பிக்கை மூலம் வலிகளிலிருந்து நிவாரணம் பெற முடியும் என்பது விஞ்ஞானபூர்வமாக கண்டறியப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி பரிசோதனையின் பிரகாரம் இறை நம்பிக்கையுடைய 12 றோமன் கத்தோலிக்கர்களுக்கு கன்னி மரியாளின் உருவப் படத்தையும் 12 நாஸ்திகர்களுக்கு அவர்கள் லியோனார்டோ டாவின்சியின் 13 ஆம் நூற்றாண்டுப் படத்தையும் வழங்கி, அவர்கள் அதனைப் பார்த்துக் கொண்டிருக்கையில் மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டது.

இதன்போது மேற்படி மின் அதிர்ச்சியால் இறை நம்பிக்கையுடைய கத்தோலிக்கர்கள் பெரிதாக வலியை அனுபவம் செய்யவில்லை என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மன விஞ்ஞான நிலைய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இப் பரிசோதனைக்காக பிந்திய மூளை இயக்க மதிப்பீட்டு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மின் அதிர்ச்சியின்போது இறை நம்பிக்கையுடையவர்களின் வலிகளை உணரும் மூளையின் பகுதி இயல்பு நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின்போது, பங்கேற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் அரை மணித்தியால நேரத்தில் 20 மின் அதிர்ச்சிகள் வீதம் வழங்கப்பட்டது.

செல்லிடத் தொலைபேசியால் தோல் நோய் ஏற்படுகிறது.

http://www.w3.org/2006/Talks/1106-sb-OneWeb-Mobile2/manycallers-mobilepic.jpg

செல்லிடத் தொலைபேசி (Mobile phone) பாவனையாளர்கள் மத்தியில் குறித்த ஒரு தோல் வியாதி (skin rash) அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செல்லிடத் தொலைபேசிகளில் நிக்கல் உலோகம் பாவிக்கப்படுவதும் அது செல்லிடத் தொலைபேசிகளை பாவிக்கும் பாவனையாளரின் முகம்,காது உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோலுடன் நீண்ட காலத்துக்கு தொடுகையில் இருக்க நேர்வதாலும் இவ் ஒவ்வாமை சார்ந்த பாதிப்பு உருவாவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் செல்லிடத் தொலைபேசிகளின் வெளிப்புற கவசம் மற்றும் பொத்தான்களில் நிக்கல் உலோகம் பாவிக்கப்படாத செல்லிடத் தொலைபேசிகளைப் பாவிப்பதால் இப்பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

பொதுவாக பெண்கள் மத்தியில் நிக்கல் உலோக ஒவ்வாமையின் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. காரணம் அவர்கள் அணியும் ஆடம்பர ஆபரணங்களிலும் நிக்கல் படலமிடப்பட்டிருப்பதே ஆகும்.

அமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம்!

பகலில் நாம் சுறுசுறுப்பாக வேலைபார்ப்பதை இரவு தூக்கம் தான் தீர்மானிக்கிறது.சரியான தூக்கம் இல்லை என்னும் போது நமது அன்றாட பணிகள் பாதிப்படைகின்றன.சராசரியாக ஒருநாளைக்கு ஏழரை மணி நேரமாவது தூங்க வேண்டும்.எனினும் இந்த அளவு நபருக்கு நபர் மாறுபடுகிறது.

பொதுவாக இந்தியர்கள் நள்ளிரவுக்கு பின் தான் தூங்கச்செல்கின்றனர். 61 சதவீதம் பேருக்கு 7மணிநேர தூக்கம் கூட இல்லை.பெரும் பாலும் தூக்கமின்மைக்கு காரணமாக கூறப்படுவது பணிச்சுமையே. பி.பி.ஓ.,நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் சரியான நேரத்துக்கு தூங்கச்செல்வதில்லை. இரவில் "டிவி" பார்ப்பதால் பலருக்கு படுக்கைக்கு சென்ற பின்னரும் தூக்கம் வருவதில்லை.

நோய் எதிர்ப்புசக்தியை அதிகரித்துக்கொள்ள முடியாது:உடல்நலத்தை பாதுகாப்பதில் தூக்கம் முக்கிய பங்காற்றுகிறது.தூக்கமின்மையால் இதய நோய்,பக்கவாதம்,உடல் பருமனாதல்,நீரிழிவு நோய்,மன அழுத்தம் போன்றவை வரலாம்.நோய் எதிர்ப்பு செல்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றன.தூங்கும் போது தான் இவற்றின் உற்பத்தி நடைபெறுகிறது.வைரஸ்,பாக்டீரியா போன்றவற்றின் தாக்குதல்களில் இருந்து மட்டுமின்றி கேன்சரில் இருந்தும் பாதுகாக்க இந்த நோய் எதிர்ப்பு செல்கள் அவசியம்.

குறைவாக தூங்குபவர்கள் அதிகம் உடற் பயிற்சி செய்வதினாலோ,நன்கு சாப்பிடுவதாலோ நோய் எதிர்ப்புசக்தியை அதிகரித்துக்கொள்ள முடியாது.தூக்கமின்றி ஒருநாள் முழுவதுமாக செலவிட்டால் நோய் எதிர்ப்பு செல்களின் எண்ணிக்கை 37சதவீதம் வரை குறைவதாக கண்டறிந்துள்ளனர்.குறைவாக தூங்குபவர்களுக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் விரைவில் ஏற்படும்.உடலில் உள்ள சுரப்பிகளையும் இது பாதிக்கிறது.

அடிக்கடி பசியுணர்வை தூண்டுவதால்,அதிகம் சாப்பிட நேரிடுகிறது. உடல் பருமனாவதுடன்,சர்க்கரை நோய்க்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. மூளையில் உள்ள வேதிப்பொருட்கள் சரியாக செயல்படவும்,மன அழுத்தம்,கோபம்,தேவையில்லாத துக்க உணர்ச்சி போன்றவற்றை தடுக்க தூக்கம் அவசியம்.

அமைதியான,இருட்டான சூழலே தூங்குவதற்கு ஏற்றது.

ஒவ்வொரு நாளும் இரவு 10மணிக்கு தூங்கி,காலை 5.30க்கு விழிப்பதை வழக்கமாக கொள்ளவும்.

தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாகவே இரவு உணவை முடித்துக்கொள்ளவும்.

தூங்கச் செல்வதற்கு முன் டீ,காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி,தினமும் 4 கி.மீ.,நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ளவும். தொடர்ந்து "யோகா" செய்பவர்களுக்கு தூக்கம் நன்றாக வரும்.

தினமும் படுக்கைக்கு செல்வதற்கு முன் புத்தகம்,செய்தித்தாள் படிப்பது,பால் குடிப்பது என ஏதாவது ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

இரண்டு வாரங்களுக்கு மேலாக தூக்கமின்மை பிரச்னை நீடித்தால் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

சுவிஸ், ஜேர்மன், டென்மார்க் நாடுகளில் ஏகன் திரைப்படம் ரத்து!



ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக எதிர்வரும் நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் நாங்கள் ஏன் கலந்துகொள்ள வேண்டும் என நடிகர்களான அஜீத், அர்ஜுன் நிர்வாகிகளிடம் கேட்டிருந்தனர்.

நேற்று முன்தினம் தமிழ்வின் இணையத்தளத்தில் "ஈழத் தமிழருக்காக ஏன் ஆதரவு வழங்க வேண்டும்" என அஜித் கூறிய இச்செய்தி வெளிவந்த சிலமணி நேரங்களில் உலகத் தமிழர்கள் கொந்தளித்ததுடன், அஜித் நடித்த ஏகன் திரைப்பட இறுவட்டை கொள்வனவு செய்த புலத்தில் வாழும் தமிழ்த் திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதனையடுத்து ஜேர்மன், பிரான்ஸ், சுவிஸ் நாடுகளில் புலப்பெயர் தமிழ்மக்கள் 25-10-2008 சனிக்கிழமை அன்று வெளியாகவிருந்த ஏகன் திரைப்படத்தை திரையிடவிடமாட்டோம் என்று ஆர்ப்பரித்ததுடன் நடிகர் அஜித் உண்ணாவிரதத்தில் பங்கேற்க இணக்கம் தெரிவித்திருந்தபோதிலும், சுவிஸ் வாழ் தமிழர்கள் ஏகன் திரைப்படத்தை திரையரங்குகளில் திரையிட அனுமதி வழங்க மறுத்து கொந்தளித்தனர்.

இம்மக்களின் கொந்தளிப்பைக் கண்டு ஏகன் படத்தை விநியோகம் செய்த IMV ஸ்தாபனத்தினர் இத்திரைப்படத்தை திரையிடமாட்டோம் என மக்களுக்கு உறுதிமொழி அளித்து அத்திரைப்படத்தை ரத்து செய்ததோடு மக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக சுவிஸ் திரையரங்குகளில் ஏகன் திரைப்படத்தை வெளியிட இருந்தவரான, கஜன் என்பவரை தமிழ்வின் தொடர்புகொண்டு கேட்டபோது அவர் இணையத்தளத்திற்கு கூறியதாவது"

"ஈழத்தமிழருக்கு ஆதரவு வழங்கி, நடிகர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க மறுத்த நடிகர் அஜித் நடித்த ஏகன் திரைப்படத்தை வெளியீடு செய்யக்கூடாது என சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் கொந்தளித்ததை அடுத்தே இவ்வாறு முடிவு செய்துள்ளோம்" எனக் கூறினார்.

இதேவேளை, ஜேர்மன் டென்மார்க் போன்ற நாடுகளிலும் தமிழ்மக்களின் கொந்தழிப்பை தொடர்ந்து, ஏகன் திரைப்படத்தை திரையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர்களை கூண்டோடு அழிக்கும் சதியில் இந்திய அரசுக்கும் பங்குண்டு...!

இலங்கைக்கு தொடர்ச்சியாக இராணுவ உதவிகள் வழங்கப்படும் என இந்திய மத்திய அரசாங்கத்தின் சார்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளாரென திவயின ஞாயிறு இதழ் பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் யுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பலைகளைப் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக இராணுவ ரீதியான உதவிகள் வழங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.

இராணுவ உதவிகள் நிறுத்தப்படாதென மத்திய அரசு, தமிழக மாநில அரசிற்கும் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஓர் அங்கமாக தொடர்ச்சியாக இலங்கைப் படையினருக்கு இராணுவப் பயிற்சிகள் வழங்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும், இராணுவ உபகரணங்களை இந்தியாவிடமிருந்து இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நாங்கள் இலங்கைக்கு இராணுவ உதவி அளிக்காவிட்டால் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இப்பிராந்தியத்தில் காலூன்ற அது வழிவகுத்துவிடும். எனவே உங்கள் பாதுகாப்புத் தேவைகளுக்கு எங்கும் அலையவேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் இருக்கின்றோம் என இலங்கைக்கு உறுதியளித்திருக்கின்றோம். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் கொல்லைப் புறத்திலுள்ள முற்றத்தை சர்வதேச நாடுகளின் விளையாட்டு மைதானமாக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இதன்படி, எதிர்வரும் வருடத்திலும் இந்தியாவின் மீசோரோமில் அமைந்துள்ள கெரில்லா தாக்குதல் பயிற்சி நிறுவகத்தில் இலங்கைப் படைவீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

எடை குறைப்பு மாத்திரைகளால் உயிருக்கு ஆபத்து

lankasri.comநவீன வாழ்க்கை முறை, உணவுப்பழக்க வழக்கம், உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் எடை அதிகரித்து உடல் குண்டாகிறது. இங்கிலாந்து நாட்டில் மட்டும் 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குண்டு உடலை சுமக்க முடியாமல் நடக்கிறார்கள்.

குண்டு உடலை குறைக்க விரும்பும் இவர்கள் கடைகளில் கிடைக்கும் மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு எடையை குறைக்கிறார்கள். இது போன்ற உடல் எடை குறைப்பு மாத்திரைகள் அபாயகரமானது என்று இங்கிலாந்து டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

ரிமோனாபென்ட் அல்லது அக்கம்பிளியா போன்ற மாத்திரைகளை பயன் படுத்துகிறவர்களுக்கு மன அழுத்தம், மனநல பாதிப்பு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது மட்டுமல்ல இது போன்ற மாத்திரைகளை பயன்படுத்துகிறவர்களை தற்கொலைக்கும் துண்டிவிட வாய்ப்பு உள்ளது என்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

இப்போது அந்த மாத்திரைகளுக்கு டாக்டர்கள் தடை விதித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய பிக்பேர்ன் (பெருவெடிப்புச் சோதனை) ஆய்வு சுவிஸட்சர்லாந்தில் ஆரம்பம்!




உலகின் மிகவும் சர்ச்சைக்குரிய ஆய்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் பிக்பேர்ன் ஆய்வுப் பணிகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
வரலாறு காணாத வகையில் குறித்த ஆய்வு தொடர்பில் மாறுபட்ட விமர்சனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன.


உயிரினங்கள் உருவாக்கப்பட்ட விதம் குறித்து ஆராய்வதற்காக நீண்ட சுரங்கமொன்றில் செயற்கையான பிரலயமொன்றை ஏற்படுத்தி அதன் மூலம் ஆய்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.



சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இந்த ஆய்வுகள் இடம்பெறுகின்றமையினால் சுவிஸ் மக்கள் மற்றும் ஊடகங்கள் பெரும் பரபரப்பாக காணப்படுகின்றன.

சுமார் 27 கிலோ மீற்றர் நீளமுடைய சுரங்கமொன்றில் அணுசக்தியைப் பயன்படுத்தி பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தி அதன் மூலம் ஏற்படும் மாற்றங்கள் கண்காணிக்கப்படவுள்ளன.

எனினும் இந்த ஆய்வுப் பணிகள் மனித குலத்தின் நிலைப்பாட்டுக்கே பங்கம் ஏற்படுத்தக் கூடும் என ஒரு சில ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எது எவ்வாறாயினும் பாரிய பொருட்செலவில் ஜெனீவா நகரில அமைக்கப்பட்டுள்ள சுரங்கத்தில் குறித்த ஆய்வுகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.



பெருவெடிப்புச் சோதனை BBC

ஸ்விட்சர்லாந்து பிரான்ஸ் எல்லைப்புறத்தின் அடியில், அணு உடைக்கும் கருவி ஒன்றைச்சுற்றி இரு திசைகளிலும், அணுக் கருத்துகள்களைக் கொண்ட கதிர்க்கற்றைகளை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக ஏவியிருக்கிறார்கள்.

பிரபஞ்சம் உருவான விதம் குறித்து மேலும் நன்றாகப் புரிந்துகொள்ளும் முயற்சி தொடங்குவதைக் குறிக்கும் ஒன்றாக இந்த பரிசோதனை அமைகிறது.

இந்த கற்றைகள் சில நேரம் சுழற்றிவிடப்பட்டு பின்னர் மோத வைக்கப்படும்போது, சூரியனை விட பல மடங்கு அதிக வெப்பம் உருவாகும்.

இதன் மூலம், அணுக் கருத்துகள்கள் உருவாகும் என்றும், அதன் மூலம் பிரபஞ்சம் எப்படி ஒன்றாக பிணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த புதிய அறிவைப் பெறமுடியும் என்றும் இயற்பியலாளர்கள் (பௌதீகவியலாளர்கள்) நம்புகிறார்கள்.

இந்த அணுத்துகள்களின் மோதல்கள் சூரியன் உட்பட அனைத்தையும், அனைத்து சக்திகளையும் அகத்துறிஞ்சிக்கொள்ளும் வல்லமை கொண்ட ஒரு கரும் சூனிய வலயத்தை உருவாக்கக்கூடும் என்றும் அதனால் உலகம் அழியக்கூடும் என்றும் சில வட்டாரங்களிலிருந்து கடுமையான எச்சரிக்கைகள் வந்துள்ளன.

பீஜிங் ஒலிம்பிக்கில் சில தவறுகள்!


பீஜிங் ஒலிம்பிக்கில் பல சிறப்பான விஷயங்கள் நடந்திருந்தாலும், ஒரு சில தவறுகள் நிகழ்ந்துள்ளதை மறுக்க முடியாது.

உலகமே மிகுந்த ஆச்சரியத்துடன் கண்டுகளித்த ஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சியில், சிறுமி லின் மியாகே சிறப்பாக பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் அடுத்த சில நாளில் உண்மை வெளியானது. துவக்க நிகழ்ச்சியில் சிறுமி உதடுகளை மட்டுமே அசைத்தார்; பாடலைப் பாடியவர் வேறு ஒருவர் என்ற உண்மை தான் அது. இது ஒலிம்பிக் ரசிகர்கள் மனதில் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்ற ஹீ-கெக்ஸின் 16 வயது நிரம்பாதவர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இவர் ஜிம்னாஸ்டிக் பிரிவில் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

பீஜிங் ஒலிம்பிக் ஊக்க மருந்து பயன்பாடற்ற ஒலிம்பிக் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தாலும், உக்ரைன் வீரர் ரஸோரோனோவ் (பளு தூக்குதல்) மற்றும் வீராங்கனை லுட்மிலா ப்ளோன்ஸ்கா (ஹெப்டத்லான்), கிரீஸ் வீராங்கனை ஹல்கியா (தடை ஓட்டம்), வடகொரியாவின் கிம் ஜோங்-சு (துப்பாக்கி சுடுதல்), ஸ்பெயினின் இஸபெல் மோரினோ (சைக்கிள் போட்டி), வியட்நாம் வீராங்கனை தி-கன் துவோங் (ஜிம்னாஸ்டிக்) ஆகியோர் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கள நடுவருக்கு உதை: ஆடவர் டேக்வான்டோ போட்டிகளின் போது கள நடுவரை முகத்தில் உதைத்த குற்றத்திற்காக கியூபா வீரர் ஏஞ்சல் வலோடியாவுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெண்கல பதக்கத்திற்கான போட்டியில், ஏஞ்சல் வாலோடியா மடோஸ், கஜகஸ்தானின் அர்மன் சில்மனொவை எதிர்த்து மோதினார். இப்போட்டியில் வாலோடியா முன்னிலையில் இருந்தாலும், கஜகஸ்தான் வீரர் வெற்றி பெற்றதாக அறிவித்து நடுவர் போட்டியை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த வாலோடியா நடுவரை காலால் எட்டி உதைத்தார். இதையடுத்து வாலோடியாவுக்கும், அவரது பயிற்சியாளருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நெஞ்சைத் தொட்டது: ஒலிம்பிக் போட்டி நடந்த சமயத்தில் ரஷ்யாவுக்கும், அதன் அண்டை நாடான ஜார்ஜியாவுக்கும் உக்கிர போர் மூண்டது. மகளிர் பிரிவு 10 மீட்டர் ஏர்-பிஸ்டல் போட்டியில் தங்கம் வென்ற ஜார்ஜிய வீராங்கனை நினோ, வெள்ளிப் பதக்கம் வென்ற நடாலியா படெரினாவை கட்டித் தழுவி தனது நட்புணர்வை வெளிப்படுத்தியது ரசிகர்களின் நெஞ்சைத் தொட்டது.

ஒரு சில குறைகள் இருந்தாலும், பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை சீனா மிகச் சிறப்பாக நடத்தியது என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நிறைவு விழாவில் பேசிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜாக் ரோஜே, அடுத்த ஒலிம்பிக்கை நடத்தும் இங்கிலாந்துக்கு விடுத்த கோரிக்கை என்னவெனில், பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளின் தரத்திற்கு சற்றும் குறைவில்லாத வகையில் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியை இங்கிலாந்து நடத்தி தர வேண்டும் என்பதே.

டோனி மீண்டும் "நம்பர் ஒன்"! இது நிரந்தரமானதா?


இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணியின் கேப்டன் டோனியின் பேட்டிங் மிகச்சிறப்பாக இருந்து வருகிறது. இலங்கையுடன் 3-வது மற்றும் 4-வது ஒரு நாள் ஆட்டங்களில் முறையே 76, 71 ரன்களை குவித்தார்.

இந்த சிறப்பான ஆட்டத்தினால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஒரு நாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த டோனி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

நேற்று வெளியிடப்பட்ட புதிய தரவரிசையில் டோனி 803 புள்ளிகளுடன் முதலிட அரியணையில் ஏறி இருக்கிறார். இதற்கு முன்பாக 2006-ம் ஆண்டு குறுகிய காலம் டோனி முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தென்ஆப்பிரிக்க கேப்டன் சுமித் 2-வது இடத்திலும் (776 புள்ளிகள்), ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கிபாண்டிங் 3-வது இடத்திலும் (751 புள்ளிகள்), மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹஸ்ஸி (750 புள்ளிகள்) 4-வது இடத்திலும், இங்கிலாந்து கேப்டன் பீட்டர்சன் 5-வது இடத்திலும் (744 புள்ளிகள்) உள்ளனர். இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர் 728 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் நீடிக்கிறார். அதே சமயம் அவுட் ஆப் பார்மில் உள்ள யுவராஜ்சிங் 678 புள்ளிகளுடன் 18-வது இடத்தில் பின்தங்கியுள்ளார்.

ஒரு நாள் போட்டி பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 20 இடங்களில் இந்தியா சார்பில் ஜாகீர்கான் மட்டுமே இடம்பெற்றுள்ளார். அவர் 642 புள்ளிகளுடன் 14-வது இடம் வகிக்கிறார்.

கற்பு என்பது எது வரை?



கற்பு என்பது தமிழ்ப் பாண்பாட்டோடு இரண்டறக் கலந்துவிட்டது என்றும், அத்தகமையானது தமிழ் பெண்களுக்கு உயிரைக் காட்டிலும் மேலானது என்ற கருத்தியலும் நமது சமூகத்தில் ஆண்டாண்டு காலம் கூறப்பட்டு வருகிறது. பண்பாடு என்ற பெயரில் ஆணாதிக்கச் சிந்தனையை உரம் போட்டு வளர்க்கவே இக் கருத்து பயன்படுகிறது.


கற்பு என்றால் என்ன? ஆங்கிலத்தில் கற்பைக் குறிக்கும் சொற்களான Chastity, Virginity என்பன, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் உடலுறவு கொள்ளாத கன்னித்தன்மையைக் குறிக்கவே பயன்படுகின்றன. கற்பழித்தல், கற்புக்கரசி போன்ற சொற்பதங்கள் ஆங்கிலம் போன்ற மொழிகளில் இல்லை. Rape என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ் பதம் வன்புணர்ச்சியே (பாலியல் வல்லுறவு) தவிர கற்பழித்தல் அல்ல. கற்பழித்தல் என்ற சொல்லாடல் முழுக்க முழுக்கத் தவறானது. கற்பை எது வரைக்கும் அழிக்கமுடியும் என்று கேட்டால் யாரிடமும் தெளிவான பதில் இல்லை. பெண்ணின் கன்னித்தன்மையை பலவந்தமாகப் பறிப்பதற்குப் பெயர்தான் கற்பழித்தல் என்றால் ஏற்கனவே கன்னித்தன்மையை இழந்த பெண்ணைப் பலவந்தப் படுத்துவதை என்ன பெயர் சொல்லி அழைப்பது? அல்லது பெண்ணின் உடலியல் ஒழுக்கம்தான் கற்பு என்றால் ஒரு பெண் அவளது விருப்பத்திற்கு மாறாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டால் அப்பெண்ணை கற்பிழந்த பெண் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? எனவே ஒரு பெண்ணை, அவள் மனைவியாக இருந்தாலும், காதலியாக இருந்தாலும் அவளது விருப்பத்திற்கு மீறி பலாத்காரப் படுத்தி உடலுறவு கொண்டால் சட்டப்படி குற்றமாகும் என்பதுடன் சம்பந்தப்பட்ட ஆணுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப் படவேண்டும் என்பதே சரியானதும் நியாயமானதுமாகும். ஒரு பெண் பாலியல் வல்லுறவு என்ற மிருகத்தனத்திற்கு உட்படுத்தப்பட்டால் அதற்காக வாழ்வை முடித்துக் கொள்வது மிகப் பெரிய அறிவீனம் ஆகும்.


நமது தமிழ் சமுதாயத்தில் கற்பு என்பதே மனைவியானவள் தன் கணவன் மீது கொண்டிருக்கும் அதீத பற்றை வெளிப் படுத்தும் ஒன்றாகவே கருதப்படுகிறது. இங்கு தமிழ் பண்பாட்டையும் வடஆரியப் பார்ப்பனப் படை எடுப்பால் தமிழர்களுக்குள் ஏற்பட்ட ஆரியத் தாக்கங்களையும் ஒப்பிடும் போது இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துருவாக்கங்களையே கொண்டுள்ளன. தமிழ்ச் சமூகம் பண்டையகாலத்தில் தாய்வழிச் சமூகமாகவே வாழ்ந்து வந்திருக்கின்றது. ஆரியப் படை எடுப்பால் தாய் வழிச் சமூகம் தந்தைவழிச் சமூகமாக மாற்றப்பட்டு பிறவிப் பெண்ணடிமைத் தனமும் ஆணதிக்கமும் புகுத்தப்பட்டன. சாதிகளற்ற தமிழ் சமுதாயத்தில் சாதியம் புகுத்தப்பட்டதைப்போல் பிறவிப் பெண்ணடிமைத்தனமும் புகுத்தப்பட்டது. அதிலும் குஷ்டம் பிடித்த கணவனை கூடையில் வைத்து தாசி வீட்டுக்குச் சென்ற நளாயினி, கட்டிய கணவனின் சுடு சொல் கேட்டு தீக்குள் குதித்த சீதை, இந்திரனோடு கட்டிலில் கூடி கன்னித்தன்மையை இழந்த அகலிகை, பஞ்ச பாண்டவர் ஐவருக்கும் பொது மனைவியாக இருந்த பாஞ்சாலி, கணவனுக்காக கண்ணைக் கட்டிக் கொண்ட காந்தாரி போன்றவர்களை பத்தினிகள் என்றும் கற்புக்கரசிகள் என்றும், அதே சமயம், தாருகா வனத்தில் முனி பத்தினிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிவன், பிருந்தாவனத்தில் கோபியர்களைக் கூட்டி வைத்து சல்லாப லீலை நடத்திய கண்ணன் போன்ற ஒழுக்கக் கேடுடைய புராணக் கதாபாத்திரங்களைக் கடவுள்களாகவும் புண்ணிய புருசர்களாகவும் காட்டியிருப்பதை எண்ணும் போது தனிப்பட்ட ஒழுக்க நலன்களைவிட ஆணாதிக்கமும் அதில் புரையோடிக் கிடக்கும் பிறவிப் பெண்ணடிமைத்தனங்களுமே மேலோங்கி நிற்கின்றன.


இராமாயணத்தில் அயோத்தியாக் காண்டம் எட்டாவது அத்தியாயம், இராமன் தனது காம இன்பத்திற்காக, அரச பழக்க வழக்கங்களுக்கு இணங்க பலதார மணம் புரிந்தான் என்று கூறுகிறது. இது இராமனின் ஒழுக்கக் கேட்டைப் பறை சாற்றுவதுடன் இராமன் ஏகபத்தினி விரதன் என்பதை நகைப்புக்குரியதாக்குகிறது. ஆரிய தர்மத்தில் கற்பு என்பது ஆண்களின் ஒழுக்கக் கேட்டையும் பெண்கள் மீதான பாலியல் வக்கிரத் தன்மைகளையுமே நியாயப் படுத்தி நிற்கின்றன.


தமிழுலகத்தை எடுத்துக்கொண்டால் பண்டைய தமிழ் இலக்கியங்கள் ஆரிய நூல்களில் கூறப்பட்டதைப்போல் பெண்களை விறகுக் கட்டைக்கு ஒப்பாக வர்ணிக்கவில்லை. அதே நேரம் ஆண்களை ஒழுக்கக் கேடர்களாகவும் வர்ணிக்கவில்லை. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒருத்தனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற கோட்பாட்டை வலியுறுத்துகின்றன. காதல் சுதந்திரமும் காதலுக்கு அடுத்த களவியலும் மிக அழகாக விளக்கப் பட்டுள்ளன. ஒருவருக்கொருவர் மனத்தைப் பறிகொடுத்த ஆணும் பெண்ணும் திருமணம் முடிக்க முன் உறவு கொள்வதை, (Pre-marital sex) இக் காதலும் களவொழுக்கமும் நியாயப் படுத்துகின்றன. தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் உள்ள களவியலில் திருமணத்திற்கு முந்திய உடலுறவுச் சுதந்திரம் விளக்கப் பட்டிருக்கிறது. திருக்குறளில் உள்ள காமத்துப் பாலில்


ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்


என்ற குறள் காதல் சுதந்திரத்தை நியாயப் படுத்துகிறது. அதே காமத்துப் பாலில் உள்ள கற்பியல் தொடர்பான குறட்பாக்கள்; காதல் துணையின் பிரிவால் ஏற்படும் உளம், உடல் சார்ந்த விரகதாபத்தையும் தலைவன் தலைவிக்கிடையே இருக்கும் ஆழமான அன்பையும் விளக்கும் விதமாகவே அமைந்திருக்கின்றனவே தவிர பிறவிப் பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தவில்லை. பெண்ணியவாதிகளால் கடுமையாக விமர்சிக்கப் படும்


தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யனப் பெய்யும் மழை


என்ற குறளுக்கு, பரிமேலழகர் போன்றவர்கள் “தெய்வத்தை வணங்காமல் கணவனை வணங்குபவள் பெய் என்று சொன்னால் மழை பெய்யும்” என்ற கருத்துப்படி பிற்போக்குத் தன்மையுடன் உரை தீட்டியுள்ளனர். ஆனால் அதன் உண்மைப் பொருள் பாவேந்தர் பாரதிதாசன், கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் உரை எழுதியதைப்போல் “தொழு என்ற சொல் பின்பற்றுதல்” என்றும் “பெய்யனப் பெய்யும் மழை என்றால் பெய்த இடத்தில்” என்றும் பொருள்படும் எனவே பெண்ணானவள் மழையைப் போன்றவள். மழை எவ்வாறு பூமியை வளப்படுத்துகிறதோ அவ்வாறு தன் வாழ்க்கைத் துணைவனை வளப்படுத்துபவள் பெண் என்பதே அக்குறளின் பொருள். இங்கே வள்ளுவரும் ஒரு பெண்ணியவாதியாகவே தென்படுகிறார். அடுத்து வள்ளுவர் கூறும் அடக்கம் என்பது அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தலைக்கனம் கொள்வது தவறு என்று சொல்கிறதே தவிர பெண்மீதான சமூக ஒடுக்குமுறையை நியாயப் படுத்திக் கூறவில்லை. வள்ளுவர் ஒழுக்கத்தை பெண்களுக்கு மட்டும் வலியுறுத்தவில்லை. ‘பிறனில் விழையாமை’ என்ற அதிகாரத்தில் ஆண்களுக்கும் வலியுறுத்துகிறார்.


சங்க இலக்கியங்களில் உள்ள குறுந்தொகை, அகநாநூறு போன்றவற்றிலும் திருமணத்திற்கு முந்திய உறவு பல இடங்களில் கூறப் பட்டுள்ளன. மனத்தால் இணைந்த ஆணும் பெண்ணும் திருமணம் முடிக்காமல் சேர்ந்து வாழும் முறையை (Concubinage) தமிழிலக்கியங்கள் வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கின்றன. இவற்றை எல்லாம் எண்ணும்போது பண்டைய தமிழ் இனம் எந்தளவிற்கு காதல் சுதந்திரத்துடன் வாழ்ந்துள்ளது என்பது தெளிவாகிறது. ஆண் புலவர்கள் மட்டுமல்ல சங்க காலத்துப் பெண்பாற் புலவர்களான ஒளவையார், வெள்ளி வீதியார் போன்றவர்களும் ஆண்களுக்கு நிகராக அரசியல் சமூகக் கருத்துக்களுடன் காதல், களவியல் செய்திகளை எல்லாம் தங்கள் பாடல்களில் பதிவு செய்து விட்டுச் சென்றிருக்கின்றனர்.

சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள பெண்ணடிமைத்தனமும், கண்ணகிக்கும் கோவலனுக்கும் நடைபெற்ற திருமணமுறையும் ஆரியக் கலாச்சாரத்தை ஒட்டியே இருக்கின்றன. சிலப்பதிகாரம் என்னதான் தமிழ்த் தேசியக் காப்பியமாக இருந்தாலும் அது எழுதப்பட்ட காலம் ஆரியப் படையெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த காலமாகையால் ஆரியக் கறை சிலப்பதிகாரத்திலும் ஒட்டிக் கொண்டுவிட்டது. இருந்த போதிலும் தமிழ் இனத்துக்கு உரிய காதலும் வீரமும் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன. கணவன் செய்யும் தவறுகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு அதற்கு உடந்தையாக இருக்கும் கண்ணகி, புராணப் பெண் கதாபாத்திரங்களான நளாயினி, சீதை போன்றவர்களைப் பிரதிபலித்தாலும், கொற்றவனே ஆனாலும் குற்றமிழைத்தவனை விடேன் என்று கட்டறுத்துக்கொண்டு ஓடிய பெண்மையின் சீற்றமாக மாறும்போது அங்கே தமிழ் இனத்தின் வீரம் அப்பெண்ணின் ஊடக வெளிப்படுகிறது.


காமம் என்பது வள்ளுவரின் காமத்துப்பாலில் சொல்லப் பட்டதைப்போல் உடல் ஒழுக்கத்துடன் கூடிய உயிரியல் தன்மையுடன் பேணப்பட வேண்டுமே தவிர வத்சயானரின் காம சாஸ்திரத்தில் கூறப்பட்டதைப்போல் தறி கெட்ட தன்மையுடன் அல்ல. பெண்களை ஆண்களின் காம இச்சையை தீர்க்கப் பயன்படும் பாலியல் நுகர்வுப் பொருட்களாகச் சித்தரிக்கும் ஆரிய நூல்கள் தமிழ்ச் சமூகத்திலிருந்து முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். எனவே, கற்பு என்ற பெயரில் பெண்களை அடிமைப்படுத்தும் முறை, வேத கால ஆரிய மரபேயன்றித் தமிழர்களுடையது அல்ல. எந்த ஆரியக் கலாச்சாரம் தமிழர்கள் மத்தியில் பெண்ணடிமைத்தனத்தைப் புகுத்தியதோ அதை தமிழ் ஆண்கள் பிடித்து வைத்துக் கொண்டு பெண்களின் கற்பை எடை போடுகின்றார்கள். ஆண்களின் தொடர்பு இல்லாமல் தவறு நடக்குமா? அப்படி நடந்தால் அதில் தங்களுக்கும் பங்கு உள்ளது என்ற நியாயமான குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் பெண்களை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு ஆண்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? படுக்கை அறையில் இரத்தக் கறையைத்தேடும் ஆண்களுக்கு, பெண்கள் உடற்பயிற்சி, நீச்சல், கராத்தே போன்றவற்றில் ஈடுபடுவது ஏமாற்றத்தையே தருகிறது. கற்பு உடல் தொடர்புள்ள ஒன்றாக இருந்தாலும் அல்லது உள்ளம் தொடர்புள்ள ஒன்றாக இருந்தாலும் கற்பு என்பது பாரதி எழுதியைப் போல்


“கற்பு நிலை என சொல்ல வந்தார், இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”



என்ற நிலைப்பாடே சரியானது,”


பெண்மீதான ஒடுக்குமுறை சமூகத்தின் அனைத்துத் தளங்களில் இருந்தும் அகற்றப்பட்டு, ஒழுக்கமும் கட்டுப்பாடும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக இருத்தல் வேண்டும். அதே சமயம் பாலியல் கல்வியும், பாதுகாப்பான உறவுக்கான கருத்தடை முறைகளும் சனத்தொகைக் கட்டுப் பாட்டிற்கும் பாலியல் நோய்களைத் தடுப்பதற்கும் இன்றியமையாதவை. பத்தாம் பசலித்தனமான பல்லவிகளைப் பாடி பிற்போக்குத் தனங்களை விதைத்தால், விதைப்பவர்கள் தங்களைக் கலாச்சாரக் காவலர்கள் என்று தம்பட்டம் அடிக்க உதவுமே தவிர, அதிகரித்து வரும் பால்வினை நோய்களைத் தடுக்க நிச்சயம் உதவப் போவதில்லை.


தமிழ் பண்பாட்டைக் காட்டிப் பெண்கள் மீது மதவாத ஆதிக்கத்தையும் மரபு வழி மடமையையும் திணிப்பதற்கு நமது தமிழ்தாயானவள், பிரம்மா உருவாக்கிய சரஸ்வதியோ, சிவனார் கொண்டையில் செருகிக் கொண்ட கங்கா தேவியோ, ஆதாமின் விலா எலும்பில் இருந்து உருவான ஏவாளோ அல்ல. அவள் எத்தனையோ பண்பாட்டுப் படை எடுப்புக்களைத் தாண்டி மொழி ஆதிக்கங்களை எதிர் கொண்டு நமக்கு முகத்தையும் முகவரியையும் தந்து நாளை முடிசூடும் நன்னாளை எதிர்பார்த்து நிற்பவள்.

காதல் என்பது என்ன?


காதலைப்பற்றிப் பேசாத கவிஞர்களும் குறைவு, காதல் வசப்படாத மனிதர்களும் குறைவு.

"காதல் என்பது ஒருவரின் இளமைகாலத்தில் வரக்கூடிய இனிமையான அனுபவம்" என்கிறார்கள் சிலர். வேறு சிலரோ "கல்யாணத்தின் பின்னர் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்புதான் உண்மையான காதல், அதுவும் கருத்தொருமித்த குடும்ப வாழ்வில் இருந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே முதுமை நிலையில் இருக்க கூடிய காதலே உண்மையான, முழுமையான காதல்" என்கிறார்கள்.

"காதலுக்கு கண்ணில்லை, காதல் வரை முறையற்றது, எவராலும் காதலை கட்டுப்படுத்த முடியாது, யாருக்கும் யார் மேலும் காதல் வரலாம்" என்கிறார்கள் சிலர். "அது எல்லாம் வெற்றுப்பேச்சு, அப்படி வருவது எல்லாம் வெறும் ஒருவர்மேல் ஒருவருக்கு வரும் ஈர்ப்பு மட்டுமே, அதை காதல் என்ற பெயாரால் நாகரீகப்படுத்தி சொல்கிறார்கள்" என்கிறார்கள் வேறு சிலர்.

"கண்ணில்லாத காதலால் குடும்பம், சமூகத்தில் பிரச்சனைகளே உருவாகும், அந்த காதல் உணர்ச்சிபூர்வமாய் இருக்காமல், அறிவு பூர்வமாய் சிந்திக்கப்பட்டு வந்தால் அது குடும்பம், சமூகத்திற்கு நன்மை தரும்" என்பது ஒரு சாராரின் வாதம். "அப்படியா, அறிவுபூர்வமாய் இருப்பது காதலே அல்ல, அது வெறும் கடமை மட்டுமே" என்பது எதிர் தரப்பினரின் வாதம். "கண்ணில்லாது ஏற்படும் காதல் என்பது வாழ்வில் பலருக்கு துன்பத்தில் முடிகிறது. அமரத்துவம் பெற்றதாய் பேசப்படும் காதல்கள் எல்லாம் துன்பத்தில் முடிந்தவையே. அப்படி இருக்கையில், வெறும் உணர்ச்சியினால் ஏற்பட்ட அப்படிப்பட்ட காதலால், தனி மனிதனுக்கோ, அல்லது சமுதாயத்துக்கோ என்ன பலன்" என்று மற்றவர்கள் சண்டைக்கு வருகிறார்கள்.

இது எல்லாம் ஒரு புறமிருக்க, "காதல் என்பது புனிதமான ஒன்று, அது உணர்வு சம்பத்தப்பட்டது மட்டுமே, உடலுக்கும் காதலுக்கும் சம்பந்தமே கிடையாது" என்பவர்கள் ஒருபுறமும், "அப்படிப்பட்ட ஒன்று காதலே அல்ல, உடலும், உணர்வும் இணைந்து வருவதே காதல்" என்பவர்கள் ஒரு புறமுமாய் வாதிட்டு கொள்கிறார்கள்.

இப்படி பல முரண்பாடுகளுடன் பேசப்படும் காதல்பற்றி நிச்சயம் உங்கள் ஒவ்வொருவருக்கும் சில கருத்துக்கள் இருக்கும். அந்த கருத்துக்களை முடிந்தால் இந்த தலைப்பின் கீழ் பதிவு செய்யுங்களேன்.

பெண்களைக் கவர சில வழிகள்…..


மிகவும் நல்ல பிள்ளை போல உபதேசம் பண்ணாதீர்கள். தத்துவங்கள் பேசாதீர்கள். உங்களை நெருங்கவே பயப்படுவாள். புன்சிரிப்புடன் இருங்கள். எந்தப்பெண்ணும் உருகிவிடுவாள். பெண்ணை பார்த்துப் புன்னகை செய்யும் போது, நீங்கள் அவளை நேசிக்கிறீர்கள் என்று என்னி ஒரு பாதுகாப்பு உணர்வைப் பெறுகிறாள்.

சினிமாவிலும், நாடகங்களிலும் கேட்ட வசனங்களை, புத்தகங்களில் படித்ததை ஒப்பிக்காதீர்கள். உங்கள் அடி மனதிலிருந்து வரும் ஆழமான சொற்களையே பேசுங்கள்.

உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிரதே? என்று பேச்சை ஆரம்பித்தால், பெண்கள் வசப்படுவார்கள். அதை அவள் நம்புகிற மாதிரி சொல்ல வேண்டும். நீங்கள் யாழ் இந்துக்கல்லூரியலா படித்தீர்கள்? நீங்கள் யாழ்ப்பாணமா? இப்படிக் கேளுங்கள்.

பின்குறிப்பு: உதை விழ்ந்தால் நான் பொறுப்பல்ல!

திருகோணமலை துறைமுகத்தின் மீது தமிழீழ விடுதலைப்புலிகளின் வானூர்தி தாக்குதல்!

திருகோணமலைத் துறைமுகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9:05 மணியளவில் அதிரடித்தாக்குதல் நடத்தியுள்ளது.

விடுதலைப் புலிகளின் வானூர்தி துறைமுகத்தினுள் இரண்டு குண்டுகளை வீசியுள்ளன என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலினால் அங்கு பாரிய சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா கடற்படையினர் வானை நோக்கி சரமாரியாக வேட்டுக்களை தீர்த்தனர் என்றும் குறிப்பிட்ட சில நிமிட நேரமாக துறைமுகப்பகுதியிலிருந்து பயங்கர வெடியோசைகள் கேட்டதாகவும் - அப்பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து திருகோணமலைக்கான தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தாக்குதல் நடத்திவிட்டுச்சென்ற விடுதலைப் புலிகளின் வானூர்திகளை கலைத்துச்சென்று தாக்குதல் நடத்துவதற்கு சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் வன்னிப்பகுதிக்கு விரைந்துள்ளன என்று வவுனியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியா வான் பரப்பிற்கு மேலாக வன்னி நோக்கி தொடர்ச்சியாக சிறிலங்கா வான்படையின் வானூர்தி சென்று கொண்டிருப்பதாக அவை மேலும் தெரிவித்தன.

(மேலதிக தகவல்கள்)

சேத விவரம் தொடர்பாக இதுவரை கிடைத்த தகவல்படி சிறிலங்கா கடற்படையினர் 18 பேர் காயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளின் வானூர்தி துறைமுகத்தினுள் இரண்டு குண்டுகளை வீசியுள்ளன என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. துறைமுகத்தின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலினால் அங்கு பாரிய சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலைத் தொடர்ந்து சிறிலங்கா கடற்படையினர் வானை நோக்கி சரமாரியாக வேட்டுக்களை தீர்த்தனர் என்றும் குறிப்பிட்ட சில நிமிட நேரமாக துறைமுகப் பகுதியிலிருந்து பயங்கர வெடியோசைகள் கேட்டதாகவும் திருகோணமலை துறைமுகப் பகுதியிலிருந்து வாகனங்கள் வேகமாக சென்று வந்துகொண்டிருப்பதாகவும் - அப்பிரதேச மக்கள் மேலும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து திருகோணமலைக்கான தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. துறைமுகத்தை அண்டிய பிரதேங்கள் எங்கும் பதற்றம் நிலவியது.

இதேவேளை, தாக்குதல் நடத்தி விட்டுச்சென்ற விடுதலைப் புலிகளின் வானூர்திகளை கலைத்துச்சென்று தாக்குதல் நடத்துவதற்கு சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் வன்னிப் பகுதிக்கு விரைந்துள்ளன என்று வவுனியா தகவல்கள் தெரிவித்தன.
வவுனியா வான் பரப்பிற்கு மேலாக வன்னி நோக்கி தொடர்ச்சியாக சிறிலங்கா வான்படை வானூர்திகள் சென்றுகொண்டிருப்பதாக அவை மேலும் தெரிவித்தன.

ஜெட்லைனர் மீது தாக்குதல் என்று கடற்படை தெரிவிப்பு

திருகோணமலை கடற்படை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: -

யாழ்ப்பாணத்துக்கு படையினரை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் 'ஜெட்லைனர்' என்ற துருப்புக்காவி கப்பல் இன்று திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்றது. படையினரை ஏற்றிச்செல்ல ஆயத்தமாக நின்றவேளை அதனை இலக்குவைத்தே விடுதலைப் புலிகளின் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
விடுதலைப் புலிகளின் வானூர்தி கடல்பக்கமாக இருந்து தாழப்பறந்து வந்து மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து திருகோணமலை கடற்படை தலைமையகம் மற்றம் சீனன்குடா வான்படைத்தளம் ஆகியவற்றிலிருந்து வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளால் தாக்குதல் நடப்பட்டது. எனினும் அது தப்பிவிட்டது.

தாக்குதல் இடம்பெற்ற நேரம் இருள் கவிழ்ந்து கிடந்ததால் விடுதலைப் புலிகளும் இலக்கை சரியாக தாக்கவில்லை. படையினரும் புலிகளின் வானூர்தியை தாக்கமுடியாமல் போய்விட்டது என்று அவை தெரிவித்தன.

செவ்வாயில் தூசு படலம்!

அமெரிக்காவின் "பீனிக்ஸ்' விண்கலம், செவ்வாய் கிரகத்தில் தூசுப் படலம் இருப்பதை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தில், மனிதன் உயிர் வாழ்வதற்கான சூழ்நிலைகள் உள்ளனவா என்பதை அறிவதற்காக, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் "பீனிக்ஸ்'விண்கலம் செலுத்தப்பட்டது.

பத்து மாத கால பயணத்திற்கு பின், கடந்த மே மாதம் செவ்வாய் கிரகத்தில் பீனிக்ஸ் தரை இறங்கியது. விண்கலத்தில் உள்ள அதி நவீன கேமரா மூலம் புகைப்படங்கள் எடுத்து, நாசா விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தில் உள்ள, நிலப் பரப்புகள் ஏற்கனவே படம் பிடித்து நாசாவிற்கு அனுப்பப்பட்டிருந்தன. இந்நிலையில், சமீபத்தில் செவ்வாயில் இளஞ் சிவப்பு நிறத்தில் தூசுப் படலம் இருப்பதை, பீனிக்ஸ் படம் எடுத்து அனுப்பியுள்ளது. "பீனிக்ஸ் அனுப்பியுள்ள புகைப்படங்களை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்படும்'என்று, நாசா விஞ்ஞானி தெரிவித்தார்.

உலகிலேயே சிறிய பாம்பினம் கண்டுபிடிப்பு. !

கரிபியன் தீவுகளில் ஒன்றான பார்படோசில் (Barbados) இல் அழிவின் விளிம்பில் உள்ள சிறிய காட்டுப்பகுதியில், பாறைகளுக்கு கீழே வாழ்ந்து வருகின்ற சுமார் 10cm நீளமுள்ள பாம்பை விலங்கியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்தப் பாம்பு கறையான்களை உணவாக்கி வாழ்ந்து வருகிறது. முழுதும் வளர்ந்த பெண் பாம்பு ஒப்பீட்டளவில் ஒரே ஒரு பெரிய முட்டையை இடுகிறது. அது பொரிக்கும் போது முழு வளர்ச்சியடைந்த பாம்பின் மொத்த நீளத்தில் கிட்டத்தட்ட அரைவாசி நீளமுள்ள குஞ்சை/குட்டியை உருவாக்குகிறது.

இந்தப் பாம்பு Leptotyphlops carlae என்ற இரு சொற்பெயரீட்டைக் கொண்டு அழைக்கப்படுகிறது. உலகில் அறியப்பட்டுள்ள 3,100 பாம்பினங்களுள் பருமனில் மிகச் சிறியது இதுவாகும்.

வழமையான பெரிய பாம்புகள் இடும் முட்டையில் இருந்து பொரிக்கும் குஞ்சுகளுக்கும் கண்டுபிடிக்கப்பட்ட சிறிய இனப்பாம்பின் முட்டையில் இருந்து பொரிக்கும் குஞ்சுக்கும் இடையில் அவற்றின் தாய்ப் பாம்புகளுடனான (முழு வளர்ச்சி கண்ட பாம்புடனான) நீளத்துடன் அமைந்த ஒப்பீடு.

மரபணு அடிப்படையில் இந்தச் சிறிய பாம்புகள் பெரிய பாம்பில் இருந்து வேறுபாட்டைக் காண்பிக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான மிகச் சிறிய இனப் பாம்புகளை அவதானிப்பது மிகக் கடினமாக இருந்து வந்துள்ள நிலையில் இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.

நாள்தோறும் ஓட்டப் பயிற்சி; இளமையை பாதுகாக்கும்- ஆய்வில் தகவல்!

நாள்தோறும் ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதால் இளமை பாதுகாக்கப்டுவதாகவும், மூப்பின் செயல்பாடுகள் மெதுவாக இருக்குமென்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். நியூயார்க்கில் இருந்து வெளியாகும் மருத்துவ இதழ் ஒன்றில் வெளியாகி உள்ள ஆய்வு முடிவின் செய்தியில் கூறியிருப்பது:

20 ஆண்டுகளாக நாள்தோறும் தவறாமல் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் (தற்போது 70 வயதாகும்) 500-க்கும் மேற்பட்டவர்களிடம் ஸ்டேண்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

ஆய்வின் முதல் கட்டத்தில் வாரம் ஒன்றுக்கு 4 மணி நேரம் இவர்கள் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு படிபடியாக குறைந்து வாரம் 76 நிமிடங்கள் என்ற அளவுக்கு குறைந்துவிட்டது. இருப்பினும், அவர்கள் ஓட்டப் பயிற்சியுடன், இதர பயிற்சிகளையும் மேற்கொண்டனர்.

புத்துணர்ச்சியுடன்... ஓட்டப் பயிற்சி, இதரப் பயிற்சிகள் மேற்கொண்டதால் தற்போது 70 வயதாகும் அவர்கள் இளமையுடன் தான் உள்ளார்கள். அவர்களின் மன, உடல் வலிமையும் வலுபெற்றுள்ளன. புத்துணர்ச்சியுடன் அவர்கள் தங்களின் அன்றாடப் பணிகளை தாங்களே செய்துகொள்கின்றனர். இவர்களுடன் 19 ஆண்டுகளுக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டு ஓட்டப் பயிற்சியை நிறுத்தியவர்களில் 34 சதவீதம் பேர் இடையிலேயே இறந்துவிட்டனர். ஓட்டப் பயிற்சி செய்தவர்களின் சிறுவயது இறப்பு சதவீதம் குறைவாக உள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.

ஓட்டப் பயிற்சியை வழக்கமாக மேற்கொள்பவர்களுக்கு இதய நோய் உள்ளிட்ட பலவித நோய்களின் தாக்கமும் குறைவுதான். இதில் ஒரு சிலரே புற்றுநோய், நரம்பியல் நோய் போன்ற நோய்களின் பாதிப்பால் சிறுவயதில் இறக்க நேரிடுவதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்டோஸ் சகாப்தத்துக்கு சாவுமணி அடிக்கவுள்ள மிதோரி மென்பொருள் மைக்ரோசொப்ட்டால் உருவாக்கம்!

உலகளாவிய கணினித் துறையில் ஆட்சி செலுத்தி வரும் "விண்டோஸ்' மென்பொருள் பாவனைக்கு முடிவு கட்டும் வகையில், கணினி செயற்பாட்டு முறைமைக்கான "மிதோரி' எனும் புதிய மென்பொருளை உருவாக்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட் நிறுவனம் களம் இறங்கியுள்ளது.

இந்த புதிய "மிதோரி' கணினி செயற்பாட்டு முறைமையானது, மைக்ரோசொப்டின் பழைய கணினி நிகழ்ச்சித் திட்டங்களிலிருந்து வேறுபட்டதாகும். இணையதளத்தை மையமாகக் கொண்ட இந்த மென்பொருளானது தனி நபர் கணினிகளுக்கு "விண்டோஸ்' மென்பொருளை இணைக்கப் பயன்படும் ஏனைய கணினி நிகழ்ச்சித் திட்டங்களில் தங்கியிராமல் சுயமாக செயற்படும் வல்லமை கொண்டதாக விளங்குகிறது.

இதன் பிரகாரம் நவீன கணினி உலகம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு "மிதோரி' தீர்வாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. இம்மென்பொருளானது கையில் எடுத்துச் செல்லக் கூடிய "லப் டொப்' கணினிகளிலான செயற்பாட்டு குறைபாடுகள் மற்றும் தரவுகள், படங்கள், ஆவணங்கள் என்பனவற்றை பரிமாறிக் கொள்வதில் எதிர்கொள்ளும் தடைகள் என்பனவற்றுக்கு சிறந்த பரிகாரம் அளிப்பதாக அமையும் என எதிர்வு கூறப்படுகிறது.

மிக நிறை குறைந்த, காவிச் செல்லக் கூடிய கணினி செயற்பாட்டு முறைமையை உருவாக்கும் இலக்கில் சிருஷ்டிக்கப்பட்டுள்ள மிதோரியானது, மாறுபட்ட பல கணினி பிரயோகங்களை இலகுவாக கையாளக் கூடிய ஒன்றாக அமையும் என மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவிக்கிறது. புதிய கணினிகளின் விற்பனையுடன் 80 சதவீதமான "விண்டோஸ்' விற்பனையும் இடம்பெற்று வருவதால், புதிதாக "மிதோரி' மென் பொருளை பாவனைக்கு கொண்டு வருவதில் பெரும் நடைமுறைச் சிக்கல் நிலவுவதாக குறிப்பிடப்படுகிறது.

தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்காகவே அரசு பேரினவாதிகளிடம் ஆதரவைப் பெற்றுள்ளது - தமிழ் தேசிய கூட்டமைப்பு !

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற வடக்கின் நிலப் பரப்புக்களை கைப்பற்றி விட்டால் யுத்தத்துக்கு முடிவு காணலாம் என்ற மாயத் தோற்றத்திற்குப் பின்னால் சிங்களவர்கள் இழுத்துச் செல்லப்படுகின்றனர்.

இது பேரழிவுக்கு வழிவகுக்குமே தவிர யுத்தத்திற்கு முடிவினைத் தராது என்பதை பெரும்பான்மை சமூகம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இனவாதக் கருத்துக்களை பரப்பி புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் தமிழர்களை அழித்தொழிப்பதற்காகவே சிங்களப் பேரினவாதிகளிடம் இருந்து அரசாங்கம் ஆதரவினைப் பெற்றிருக்கின்றது.

தனது குறுகிய வெற்றியின் ஊடாக நீண்ட கால வெற்றியைக் காண அரசினால் ஒருபோதும் முடியாது. எனவே அரசியல் தீர்வு எட்டப்படாத வரையில் இந்த நாட்டுக்கு நிம்மதி ஏற்படப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்களில் அரசாங்கம் வெற்றியடைந்துள்ளமை குறித்து கேட்ட போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

சிங்கள அரசாங்கங்களின் வரலாற்று ரீதியிலான தவறுகள் சிங்களப் பேரினவாதிகளால் இன்றுவரையில் அரங்கேற்றப்பட்டு வருகின்றமை மிகவும் பாரதூரமான விடயமாகும்.

சிங்கள மக்கள் மத்தியில் இனத்துவேஷமான கருத்துக்களை திணித்து தமிழரையும் சிங்களவரையும் இணையவிடாது பிரித்து வைப்பதையே பேரினவாத அரசியல் தலைவர்கள் விரும்புகின்றனர்.

சிங்களவர்கள் மத்தியில் அரசியல் செய்வதற்கு அது அவர்களுக்கு தேவையாகவும் இருக்கின்றது.

அரசாங்கம் தமது ஊடகங்களில் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்வதாகவே பரப்புரை செய்கின்றது.

இதேபோல் ஏனைய சிங்கள ஊடகங்களும் தமிழ் மக்களின் துன்ப துயரங்களை எடுத்துக் கூறுவதில்லை.

வடக்கின் மீது தொடுக்கப்பட்டுள்ள போரினால் இலட்சக்கணக்கான தமிழர்கள் தமது வாழ்விடங்களை இழந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் அல்லாடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் நிலைவரங்கள் சிங்களவர்களுக்கு மூடி மறைக்கப்படுகின்றன.

பொருள்களை பார்வையிலிருந்து மறையச் செய்யும் தொழில்நுட்பம்: விஞ்ஞானிகள் தீவிரம்!

நம் நாட்டில் மந்திரவாதிகள், தந்திரவாதிகள் செய்யும் கண்கட்டி வித்தையைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இது எந்தளவு உண்மை என்பது தெரியாது. ஆனால் இந்தக் கண்கட்டி வித்தையை அறிவியல் பூர்வமாகச் செய்ய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அந்த ஆராய்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது.

இந்த ஆராய்ச்சியில் பொருள்களை அல்லது மனிதர்களை கண் பார்வையிலிருந்து மறையச் செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அதை நடைமுறைப்படுத்தும் இறுதிக்கட்ட ஆய்வில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

ஒரு பொருள் அல்லது மனிதனைச் சுற்றியுள்ள ஒளிக்கதிர்களை விலகிச் செல்ல செய்வதன் மூலம் அந்தப் பொருளை அல்லது அந்த மனிதனை கண் பார்வையிலிருந்து மறையச் செய்ய முடியும். அதாவது ஆற்றின் நடுவே இருக்கும் பாறையிலிருந்து தண்ணீர் விலகிச் செல்வது போல ஒளிக்கதிர்களை அந்த பிம்பத்திலிருந்து விலகச் செய்ய முடியும் என்று தி சண்டே டைம்ஸ்' பத்திரிகையில் மூத்த விஞ்ஞானி சியாங் சாங் கூறியுள்ளார்.

இவ்வாறு செய்யும்போது கண் பார்வையிலிருந்து அந்த பொருளை முற்றிலுமாக மறைத்துவிடலாம்.

இதுபோன்று ஒரு பெரிய கப்பலையோ அல்லது டாங்கியையோ மறையச் செய்வதன் மூலம் போரில் இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

பொருள்களை கண் பார்வையிலிருந்து மறையச் செய்யும் தொழில்நுட்பம் இன்னும் ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளது. விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகிழ்ச்சியான பெண்களுக்கு மார்பக புற்று நோய் வராது!

இளம்பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவது பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது.நவீன வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கம் ஆகியவையும் இதற்கு ஒரு காரணம்.

இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த சில டாக்டர்கள் நடத்திய ஆய்வில் சந்தோஷமான வாழ்க்கை நடத்தும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

எப்போதும் மகிழ்ச்சியாகவும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும் உள்ள பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்பட வழி இல்லை என்கிறார்கள். அந்த டாக்டர்கள் 450 பெண்க ளிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவலை தெரி வித்துள்ளனர்.

இதே போல தூங்கும் போது கனவு காண்பது உடல் நலத்துக்கும் மனதுக்கும் நல்லது என்கிறார்கள் டாக்டர்கள். அடிக்கடி கனவு காண்பது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதுடன் சிக்கலான பிரச்சினைகளை திறமையாக சமாளிக்கும் சக்தியை கொடுக்கிறது என்றும் கூறினார்கள்.

சூரிய சக்தியால் இயங்கும் அதிசய விமானம் 83 மணி நேரம் பறந்து உலக சாதனை

சூரிய சக்தியால் இயங்கும் கார்கள் ஏற்கனவே வெளி வந்து விட்டன. இப்போது சூரிய சக்தியால் இயங்கும் விமானங்களும் பறக்கத் தொடங்கி விட்டன.

இங்கிலாந்தைச் சேர்ந்த நிபுணர்கள் `செபிர்-6' என்ற புதிய ரக குட்டி விமானத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

அமெரிக்க ராணுவத்தின் உளவுப் பிரிவுக்காக இந்த சூரிய சக்தி விமானம் உரு வாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் இந்த சூரிய சக்தி விமானத்தின் சோதனை ஓட்டம் நடந் தது.

இந்த ஆள் இல்லாத குட்டி விமானம் 83 மணி 37 நிமிட நேரம் இரவு பகலாக தொடர்ச்சியாக பறந்து உலக சாதனை படைத்துள்ளது.

30 கிலோ எடை உள்ள இந்த குட்டி விமானம் 60 ஆயிரம் அடி உயரத்தில் பறக் கும் ஆற்றல் கொண்டது. பகல் நேரத்தில் சூரிய சக்தியை பயன்படுத்தி பேட்டரி ரீசார்ஜ் செய்து கொண்டு இரவு நேரத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளும்.

Taskmaneger ஐ Eneble செய்வது எப்படி?

click this address
(please open via internet explorer)

http://windowsxp.mvps.org/reg/EnableTM.reg


Click Run.


அகராதிகள்

http://www.freedict.com/onldict/dut.html
குறிப்பிட்ட சில மொழிகளின் அகராதிகளின் இணையமுகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது।

நீங்கள் ஆங்கிலத்தில் நினைக்கும் ஒரு சொல்லினை search என்ற இடத்தில் type செய்து click செய்யவும்.


English-malay click here
http://www.dicts.info/di1.php?k1=1&k2=224

English-tamil click here
http://dictionary.sarma.co.in/Default.aspx

English-shinhala-tamil
http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp

இந்த இணையதளத்தில் வசனமாகவும் தேடலாம்.
http://www.freetranslation.com/

கப்ஸ் லொக்(Capslock) கீயை அழுத்தும்போது ஒலி ஏற்படுத்தும் செயற்பாடு !

எம்மில் பலர் கீபோர்டில்(Key board) ரைப்செய்யும்போது தவறுதலாக கப்ஸ் லொக்(Capslock) கீயை அழுத்திவிடுவார்கள். ஆதன்பின்னர் ரைப்செய்யும் எழுத்துக்கள் பெரிய(Capital) எழுத்துக்களாக திரையில் தெரியும். இந்த சிக்கலுக்கு விண்டோஸில் ஒரு தீர்வு உள்ளது. அதாவது கப்ஸ் லொக்(Capslock)கீயை அழுத்தும்போது ஒரு ஒலி கேட்கும். எவ்வாறு செயற்படுத்துவது?
கன்ட்ரோல் பனலுக்கு செல்லவும்.(Start>setting>control panal) Accessibility option என்ற ஐக்கனை (Double Click) செய்யவும். அப்பொழுது தோன்றும் விண்டோஸின் கீழ்பகுதியில்; Use Toggle Keys என்பதன் இடதுபுறமுள்ள செக்பொக்சில் டிக்(Click) செய்து பின்னர் Apply யை click செய்து பின்னர் ok யை click செய்யவும். தற்பொழுது கப்ஸ் லொக்(Capslock) கீயை அழுத்தும்போது கப்ஸ் லொக்(Capslock) on ஆகும்வேளையில் பீப்(Beep) என்ற ஒலியும் off ஆகும்வேளையில் மற்றொரு வித ஒலியும் கேட்கும். இந்த ஒலி num lock,scroll lock ஆகிய கீகளை (on/off)செய்யும்போதும் கேட்கும்.