சிலம்பாட்டத்தில் "சின்ன ரம்பா...."சிம்பு வைத்த செல்லப் பெயராம்

அழியாத வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடித்துவிட்டது ரம்பாவின் தொடை! இன்றளவும் இந்த வரலாறை மீற ஒரு நடிகைக்கும் சாமர்த்தியம் இல்லை.

ஆனால், சனாகானிடம் எதைக் கண்டாரோ? ‘சின்ன ரம்பா’ என்றே அழைக்கிறாராம் சிம்பு. அழைத்தால் போதுமா? அதை பதிவு செய்ய வேண்டாமா? சிலம்பாட்டம் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கும் சனாகானை மேலே சொன்ன ‘பட்ட பெயரோடு’ அழைத்து ஒரு பாடலே பாடியிருக்கிறாராம். ‘பம்பாய் இப்போ மும்பையானது. சின்ன ரம்பா இப்போ தெம்பாதான் திரியுது’ என்று தொடங்குகிறதாம் அந்த பாடல். தன்னை ரம்பா என்று அழைப்பதில் ரொம்பவே சந்தோஷப்படுகிறார் சனாகானும். ஒவ்வொரு படத்திலும் தனது அசோக் பில்லர் தொடைகளை காட்ட தயங்கியதே இல்லை ரம்பா. சனாகான் அப்படி ஏதாவது இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறாரா என்பதை சிலம்பாட்டம் வந்த பிறகுதான் முடிவு செய்யவேண்டும்.

சின்ன ரம்பாவுக்கு யூனிட் கொடுக்கும் முன்னுரிமை மற்றொரு நாயகியான சினேகாவுக்கு சின்ன கோபத்தை வரவழைத்திருக்கிறதாம். ஆனாலும், தனது முறை வரட்டும். நடிப்பாலேயே அடிக்கிறேன் என்று சபதம் செய்திருக்கிறாராம். இரண்டு பெண்கள் ஓரிடத்தில் இருந்தால், கலகலப்பும் உண்டு. கைகலப்பும் உண்டு!

தோல்வியில் துவண்ட ஹீரோ!

வெயில் படத்திற்குப் பிறகு பரத்துக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. படம் ஓரளவுக்கு வெற்றிதான் என்றாலும் பரத்தைவிட பசுபதிதான் அதிகம் பேசப்பட்டார். அதற்குப்பின் திருமுருகன் இயக்கிய எம் மகன் ஓரளவுக்கு ஓடியது. அதற்கடுத்து எந்தப் படமும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. கூடல் நகர், சென்னை காதல், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, தற்போது வெளியான சேவல் வரை வரிசையாக தோல்விப் படங்கள். அதனால் மனம் நொந்தவருக்கு தற்போது ஆறுதல் தரும் படமாகவும், நம்பிக்கை படமான ஆறுமுகத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்குவதால் மிகவும் தெம்புடன் இருக்கிறார். இருந்தாலும் காதல் படத்தை போல மிகப்பெரிய வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார். அதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு ஒரு சில கதைகளை ஓ.கே. பண்ணி வைத்திருக்கிறார். ஆறுமுகம் படம் வெளியானவுடன் அந்தப் படத்தில் நடிக்கவுள்ளார். எப்படிப்பட்ட நடிகராக, இயக்குனராக இருந்தாலும் தற்போதைய ஹிட்தான் பேசப்படும் என்பதை தெளிவோடு புரிந்து வைத்துள்ளார் பரத்.

சிறுவர்களில் மூளைப் புற்றுநோயை தோற்றுவிக்கும் மரபணு அலகு கண்டுபிடிப்பு.

lankasri.comபிரித்தானிய கேம்பிரிஷ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சிறுவர்கள் மத்தியில் மூளையில் ஏற்படும் புற்றுநோய்க்கு அநேகம் காரணமாக விளங்கும் மரபணு அலகை (gene) கண்டறிந்துள்ளனர்.

இந்த மரபணு அலகானது மரபணு அலகுகளின் இணைவால் உருவாகும் ஒரு fusion gene என்று கண்டறியப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் இந்த மரபணு அலகின் தொழிற்பாட்டை நிரோதிப்பதன் மூலம் சிறுவர்கள் மத்தியில் மூளைப் புற்றுநோய் தோன்றுவதிலின்றும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பாதுகாப்பளிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இக்கண்டுபிடிப்பு இத்துறையில் சிறந்த முன்னுதாரணக் கண்டுபிடிப்பாகி இருப்பதோடு எதிர்கால ஆய்வுகள் பலவற்றுக்குமான உறுதியான ஆரம்ப அடித்தளத்தை இட்டிப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

"ஒரு கோடியே 5லட்சம் சதுர மைல்" வான மண்டலத்தில் விழுந்த பெரிய "ஓட்டை";பூமிக்கு ஆபத்தா?

lankasri.comஅமெரிக்காவில் உள்ள "நாசா" விண்வெளி ஆய்வு மையம் வான மண்டலத்தில் ஏற்பட்டுள்ள "ஓட்டை" குறித்து ஆய்வு செய்து வருகிறது."நாசா”வை சேர்ந்த விஞ்ஞானி பால் நியூமன் தலைமையிலான குழுவினரின் ஆராய்ச்சியில்,கடந்த ஆண்டு 97லட்சம் சதுர மைல் அளவுக்கு வானவெளியில் ஓட்டை ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. இது பரப்பளவில் வடக்கு அமெரிக்காவுக்கு இணையானது ஆகும்.

இந்த வான மண்டல ஓட்டை மென் மேலும் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும் விஞ்ஞானிகளின் ஆய்வு கூறுகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த ஓட்டை ஒரு கோடியே 5லட்சம் சதுர மைல் அளவுக்கு பெரிதாகி உள்ளதாக ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வான மண்டல ஓட்டையின் பரப்பளவு அதிகரித்துக்கொண்டே செல்வதால் "அல்ட்ரா" கதிர்கள் பூமியை தாக்கும் அபாயம் இருக்கிறதா? என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

உண்மைத்தமிழனா அஜித்? உப்பிட்டவனை மறக்காதே...

"சினிமாவை சினிமாவோடு விட்டுவிடுங்கள்: அஜுத்" என்பதன் உள்கருத்து என்ன?

கடந்த சில நாட்களுக்கு முன் அஜுத் இந்த போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளனும் என்று செய்தி வெளியிட்டதை அடுத்து புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கொந்தழிப்பின் பின் அஜுத் தான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்று ஊடங்கங்களுக்கு விசேட கருத்தை தெரிவித்திருந்தார்.

வேண்டா வெறுப்பாகத்தான்(சுயநலத்துக்காக) இவர் இந்தப்போராட்டத்தில் கலந்து கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. போராட்டம் என்பது உணர்வு சம்மந்தப்பட்டது. இவருக்குத்தான் தமிழன் என்ற உணர்வு கொஞ்சம்கூட இல்லை. கமெரா முன் நடிக்கத்தெரிந்த அவருக்கு நிஜவாழ்க்கையில் நடிக்கக்கூடத்தெரியவில்லை. மனமில்லாமல் வந்தவர் இந்த உண்ணாவிரதப் போரட்டத்தில் ஆற்றிய உரையில் ஈழத்தமிழர் பற்றிய எந்த ஒரு விடயத்தை கூட அவர் அங்கு குறிப்பிடவில்லை. மாறாக,"சினிமாவை சினிமாவோடு விட்டுவிடுங்கள்" என்று விசமதனமாக சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

அஜுத்தின் அந்த கருத்துக்கு தமிழ் சினிமா நடிகர் சங்க தலைவர் சரத்குமார் "நீங்கள் ஊட்டிவிட்டு வளந்தவர்கள் தான் நாங்கள், உங்களுக்காக போராட நாங்கள் காத்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் அஜுத் இந்த போராட்டத்தில் ஏன் கலந்து கொள்ளனும் என்று செய்தி வெளியிட்டதை அடுத்து புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கொந்தழிப்பின் பின் அஜுத் தான் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வேன் என்று ஊடங்கங்களுக்கு விசேட கருத்தை தெரிவித்திருந்தார்.

நன்றிகெட்ட ................!