ஈழத்தமிழர்களை கூண்டோடு அழிக்கும் சதியில் இந்திய அரசுக்கும் பங்குண்டு...!

இலங்கைக்கு தொடர்ச்சியாக இராணுவ உதவிகள் வழங்கப்படும் என இந்திய மத்திய அரசாங்கத்தின் சார்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளாரென திவயின ஞாயிறு இதழ் பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் யுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பலைகளைப் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக இராணுவ ரீதியான உதவிகள் வழங்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது.

இராணுவ உதவிகள் நிறுத்தப்படாதென மத்திய அரசு, தமிழக மாநில அரசிற்கும் அறிவித்துள்ளது.

பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஓர் அங்கமாக தொடர்ச்சியாக இலங்கைப் படையினருக்கு இராணுவப் பயிற்சிகள் வழங்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும், இராணுவ உபகரணங்களை இந்தியாவிடமிருந்து இலங்கை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நாங்கள் இலங்கைக்கு இராணுவ உதவி அளிக்காவிட்டால் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இப்பிராந்தியத்தில் காலூன்ற அது வழிவகுத்துவிடும். எனவே உங்கள் பாதுகாப்புத் தேவைகளுக்கு எங்கும் அலையவேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் இருக்கின்றோம் என இலங்கைக்கு உறுதியளித்திருக்கின்றோம். எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் கொல்லைப் புறத்திலுள்ள முற்றத்தை சர்வதேச நாடுகளின் விளையாட்டு மைதானமாக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இதன்படி, எதிர்வரும் வருடத்திலும் இந்தியாவின் மீசோரோமில் அமைந்துள்ள கெரில்லா தாக்குதல் பயிற்சி நிறுவகத்தில் இலங்கைப் படைவீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

1 comments:

said...

ஜெ மற்றும் காங்கிரஸ் சொல்லும் படி ஆடும் ஜெயா மற்றும் சோனியாவின் கைகூலி கருனாநிதியே, சீமான், அமீர் வைகோ வை விடுதலை செய்..
நீ முதலவரா, அல்லது ஜெயா முதல்வரா?

காங்கிரஸ் கருமாந்திரம் மன்மோகன்சிங்கே, ஆங்காங்கே வெடி வெடித்து உயிர் போகிறது,அதை தடுக்க துப்பில்லை உன் க்ருமாந்திர அரசுக்க்கு.. இறையான்மை பேசிறீங்க.. சோம்பேறிங்க.. தூ.... தே (சிய) - காங்கிரச் நாய்களா