வைகைப்புயலின் வேகம்... தயாரிப்பாளர்கள் சோகம்!

வரப்போகும் புத்தாண்டு வடிவேலுவுக்கு இடி கொடுக்கும் போலிருக்கிறது. தினந்தோறும் 7 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர் ஒரேயடியாக 9 லட்சமாக உயர்த்திவிட்டாராம். அதிர்ந்து போயிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதையும் தர தயாராக இருக்கிற சிலருக்கும், வடிவேலுவின் தினப்படி ஷெட்யூல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே அதை மட்டுமாவது சீரமைக்கும்படி கேட்கிறார்களாம். காலை 11 மணிக்கு படப்பிடிப்புக்கு வரும் வடிவேலு, சரியாக ஒரு மணிக்கு லஞ்ச் பெல் அடித்துவிடுவாராம். அதன் பின் ஸ்பாட்டுக்கு வருவது 3 மணிக்குதானாம். மாலை ஆறு மணிக்கெல்லாம் இவருக்கு பேக்கப் சொல்லிவிட வேண்டும். சொல்லாவிட்டாலும், காரில் ஏறி போய் கொண்டேயிருப்பாராம். இந்த கால நேரத்தை கொஞ்சம் மாற்றிக் கொண்டாலாவது பரவாயில்லை என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

எதற்கும் சம்மதிக்காத வடிவேலு தனது பிடிவாதத்தை தளர்த்த மறுப்பதால், வைகைப்புயலின் வாசல் படி மிதிக்கவே அஞ்சுகிறது திரையுலகம். விளைவு...? வில்லுவை தவிர வேறு படங்கள் எதுவும் கையில் இல்லை அண்ணாச்சிக்கு. சும்மாதானே இருக்கிறோம் என்று நினைத்திருப்பார் போல... சொந்த ஊருக்கு பிள்ளை குட்டிகளோடு போயிருக்கிறாராம்.

ஒருவேளை அரசியல் ஆசை பிடித்து ஆட்டுகிறதோ என்னவோ?

0 comments: