தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்காகவே அரசு பேரினவாதிகளிடம் ஆதரவைப் பெற்றுள்ளது - தமிழ் தேசிய கூட்டமைப்பு !

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற வடக்கின் நிலப் பரப்புக்களை கைப்பற்றி விட்டால் யுத்தத்துக்கு முடிவு காணலாம் என்ற மாயத் தோற்றத்திற்குப் பின்னால் சிங்களவர்கள் இழுத்துச் செல்லப்படுகின்றனர்.

இது பேரழிவுக்கு வழிவகுக்குமே தவிர யுத்தத்திற்கு முடிவினைத் தராது என்பதை பெரும்பான்மை சமூகம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இனவாதக் கருத்துக்களை பரப்பி புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில் தமிழர்களை அழித்தொழிப்பதற்காகவே சிங்களப் பேரினவாதிகளிடம் இருந்து அரசாங்கம் ஆதரவினைப் பெற்றிருக்கின்றது.

தனது குறுகிய வெற்றியின் ஊடாக நீண்ட கால வெற்றியைக் காண அரசினால் ஒருபோதும் முடியாது. எனவே அரசியல் தீர்வு எட்டப்படாத வரையில் இந்த நாட்டுக்கு நிம்மதி ஏற்படப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.

வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்களில் அரசாங்கம் வெற்றியடைந்துள்ளமை குறித்து கேட்ட போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

சிங்கள அரசாங்கங்களின் வரலாற்று ரீதியிலான தவறுகள் சிங்களப் பேரினவாதிகளால் இன்றுவரையில் அரங்கேற்றப்பட்டு வருகின்றமை மிகவும் பாரதூரமான விடயமாகும்.

சிங்கள மக்கள் மத்தியில் இனத்துவேஷமான கருத்துக்களை திணித்து தமிழரையும் சிங்களவரையும் இணையவிடாது பிரித்து வைப்பதையே பேரினவாத அரசியல் தலைவர்கள் விரும்புகின்றனர்.

சிங்களவர்கள் மத்தியில் அரசியல் செய்வதற்கு அது அவர்களுக்கு தேவையாகவும் இருக்கின்றது.

அரசாங்கம் தமது ஊடகங்களில் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்வதாகவே பரப்புரை செய்கின்றது.

இதேபோல் ஏனைய சிங்கள ஊடகங்களும் தமிழ் மக்களின் துன்ப துயரங்களை எடுத்துக் கூறுவதில்லை.

வடக்கின் மீது தொடுக்கப்பட்டுள்ள போரினால் இலட்சக்கணக்கான தமிழர்கள் தமது வாழ்விடங்களை இழந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் அல்லாடிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் நிலைவரங்கள் சிங்களவர்களுக்கு மூடி மறைக்கப்படுகின்றன.

பொருள்களை பார்வையிலிருந்து மறையச் செய்யும் தொழில்நுட்பம்: விஞ்ஞானிகள் தீவிரம்!

நம் நாட்டில் மந்திரவாதிகள், தந்திரவாதிகள் செய்யும் கண்கட்டி வித்தையைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். இது எந்தளவு உண்மை என்பது தெரியாது. ஆனால் இந்தக் கண்கட்டி வித்தையை அறிவியல் பூர்வமாகச் செய்ய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அந்த ஆராய்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது.

இந்த ஆராய்ச்சியில் பொருள்களை அல்லது மனிதர்களை கண் பார்வையிலிருந்து மறையச் செய்யும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அதை நடைமுறைப்படுத்தும் இறுதிக்கட்ட ஆய்வில் விஞ்ஞானிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

ஒரு பொருள் அல்லது மனிதனைச் சுற்றியுள்ள ஒளிக்கதிர்களை விலகிச் செல்ல செய்வதன் மூலம் அந்தப் பொருளை அல்லது அந்த மனிதனை கண் பார்வையிலிருந்து மறையச் செய்ய முடியும். அதாவது ஆற்றின் நடுவே இருக்கும் பாறையிலிருந்து தண்ணீர் விலகிச் செல்வது போல ஒளிக்கதிர்களை அந்த பிம்பத்திலிருந்து விலகச் செய்ய முடியும் என்று தி சண்டே டைம்ஸ்' பத்திரிகையில் மூத்த விஞ்ஞானி சியாங் சாங் கூறியுள்ளார்.

இவ்வாறு செய்யும்போது கண் பார்வையிலிருந்து அந்த பொருளை முற்றிலுமாக மறைத்துவிடலாம்.

இதுபோன்று ஒரு பெரிய கப்பலையோ அல்லது டாங்கியையோ மறையச் செய்வதன் மூலம் போரில் இந்த தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

பொருள்களை கண் பார்வையிலிருந்து மறையச் செய்யும் தொழில்நுட்பம் இன்னும் ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளது. விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகிழ்ச்சியான பெண்களுக்கு மார்பக புற்று நோய் வராது!

இளம்பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவது பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது.நவீன வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கம் ஆகியவையும் இதற்கு ஒரு காரணம்.

இந்த நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த சில டாக்டர்கள் நடத்திய ஆய்வில் சந்தோஷமான வாழ்க்கை நடத்தும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

எப்போதும் மகிழ்ச்சியாகவும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும் உள்ள பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்பட வழி இல்லை என்கிறார்கள். அந்த டாக்டர்கள் 450 பெண்க ளிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவலை தெரி வித்துள்ளனர்.

இதே போல தூங்கும் போது கனவு காண்பது உடல் நலத்துக்கும் மனதுக்கும் நல்லது என்கிறார்கள் டாக்டர்கள். அடிக்கடி கனவு காண்பது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதுடன் சிக்கலான பிரச்சினைகளை திறமையாக சமாளிக்கும் சக்தியை கொடுக்கிறது என்றும் கூறினார்கள்.

சூரிய சக்தியால் இயங்கும் அதிசய விமானம் 83 மணி நேரம் பறந்து உலக சாதனை

சூரிய சக்தியால் இயங்கும் கார்கள் ஏற்கனவே வெளி வந்து விட்டன. இப்போது சூரிய சக்தியால் இயங்கும் விமானங்களும் பறக்கத் தொடங்கி விட்டன.

இங்கிலாந்தைச் சேர்ந்த நிபுணர்கள் `செபிர்-6' என்ற புதிய ரக குட்டி விமானத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

அமெரிக்க ராணுவத்தின் உளவுப் பிரிவுக்காக இந்த சூரிய சக்தி விமானம் உரு வாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் இந்த சூரிய சக்தி விமானத்தின் சோதனை ஓட்டம் நடந் தது.

இந்த ஆள் இல்லாத குட்டி விமானம் 83 மணி 37 நிமிட நேரம் இரவு பகலாக தொடர்ச்சியாக பறந்து உலக சாதனை படைத்துள்ளது.

30 கிலோ எடை உள்ள இந்த குட்டி விமானம் 60 ஆயிரம் அடி உயரத்தில் பறக் கும் ஆற்றல் கொண்டது. பகல் நேரத்தில் சூரிய சக்தியை பயன்படுத்தி பேட்டரி ரீசார்ஜ் செய்து கொண்டு இரவு நேரத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளும்.

Taskmaneger ஐ Eneble செய்வது எப்படி?

click this address
(please open via internet explorer)

http://windowsxp.mvps.org/reg/EnableTM.reg


Click Run.


அகராதிகள்

http://www.freedict.com/onldict/dut.html
குறிப்பிட்ட சில மொழிகளின் அகராதிகளின் இணையமுகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது।

நீங்கள் ஆங்கிலத்தில் நினைக்கும் ஒரு சொல்லினை search என்ற இடத்தில் type செய்து click செய்யவும்.


English-malay click here
http://www.dicts.info/di1.php?k1=1&k2=224

English-tamil click here
http://dictionary.sarma.co.in/Default.aspx

English-shinhala-tamil
http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp

இந்த இணையதளத்தில் வசனமாகவும் தேடலாம்.
http://www.freetranslation.com/

கப்ஸ் லொக்(Capslock) கீயை அழுத்தும்போது ஒலி ஏற்படுத்தும் செயற்பாடு !

எம்மில் பலர் கீபோர்டில்(Key board) ரைப்செய்யும்போது தவறுதலாக கப்ஸ் லொக்(Capslock) கீயை அழுத்திவிடுவார்கள். ஆதன்பின்னர் ரைப்செய்யும் எழுத்துக்கள் பெரிய(Capital) எழுத்துக்களாக திரையில் தெரியும். இந்த சிக்கலுக்கு விண்டோஸில் ஒரு தீர்வு உள்ளது. அதாவது கப்ஸ் லொக்(Capslock)கீயை அழுத்தும்போது ஒரு ஒலி கேட்கும். எவ்வாறு செயற்படுத்துவது?
கன்ட்ரோல் பனலுக்கு செல்லவும்.(Start>setting>control panal) Accessibility option என்ற ஐக்கனை (Double Click) செய்யவும். அப்பொழுது தோன்றும் விண்டோஸின் கீழ்பகுதியில்; Use Toggle Keys என்பதன் இடதுபுறமுள்ள செக்பொக்சில் டிக்(Click) செய்து பின்னர் Apply யை click செய்து பின்னர் ok யை click செய்யவும். தற்பொழுது கப்ஸ் லொக்(Capslock) கீயை அழுத்தும்போது கப்ஸ் லொக்(Capslock) on ஆகும்வேளையில் பீப்(Beep) என்ற ஒலியும் off ஆகும்வேளையில் மற்றொரு வித ஒலியும் கேட்கும். இந்த ஒலி num lock,scroll lock ஆகிய கீகளை (on/off)செய்யும்போதும் கேட்கும்.